இந்திய அணி ஆசிய கிரிக்கெட் கோப்பையில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது. இதனையடுத்து அணியின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் உலகக்கோப்பைக்கான தொடருக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்ரிக்கா அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.
T20 உலககோப்பைக்கு முன்பு இத்தொடர்கள் நல்ல பயிற்சியாக இருக்கும் என்று இந்திய அணியின் நிர்வாகம் கூறியுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முழு பலத்தை களமிறக்கவுள்ள இந்தியா, தென்னாப்பிரிக்க தொடரில் சிறிய மாற்றங்களை செய்துள்ளது.
ஓப்பனிங்கை பொறுத்தவரையில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் என ஆசிய கோப்பையில் இருந்தே அதே ஃபார்முலா தான். 3வது ஓப்பனருக்கே செல்லவில்லை.மிடில் ஆர்டரில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.
ஆனால் ஃபினிஷர் பணிகளுக்காக இருந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறவில்லை. இதனால் பவுலிங் மற்றும் பேட்டிங்கில் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும்.ந்துவீச்சை பொறுத்தவரையில் ரவிச்சந்திரன் அஸ்வின், யுவேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல் ஆகியோர் விளையாடுகின்றனர்.
வேகப்பந்துவீச்சில் முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சஹார் என பலமான வீரர்கள் களமிறங்குகின்றனர். ஆனால் இதில் புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் இந்திய அணி இத்தொடர்களை வென்று t20 உலககோப்பைக்கு நம்பிக்கையுடன் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது