இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகள் இந்தாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ளது. இதில் பங்களாதேஷ் மற்றும் ஹாங்காங் முதல் சுற்றிலேயே வெளியேறியது. தற்போது அடுத்தகட்ட போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இதில் ஸ்ரீலங்கா அணி கிட்டத்தட்ட இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளது. மற்ற ஒரு இடத்திற்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா போட்டிபோட்டுக்கொண்டிருக்கின்றது. இதில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியுடனான போட்டியில் தோல்வியை சந்தித்து கிட்டத்தட்ட தொடரை விட்டு வெளியேறிவிட்டது.
ஆனால் இன்னமும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு வாய்ப்புகள் இருக்கின்றது. இந்நிலையில் இந்திய அணிக்கும் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கு இந்த நான்கும் நடக்கவேண்டும்
1 ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் அணியை வீழ்த்தவேண்டும்
2 இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தவேண்டும்
3 ஸ்ரீலங்கா அணி பாகிஸ்தானை வீழ்த்தவேண்டும்
4 பிறகு இந்திய அணி பாகிஸ்தான் அணியின் ரன் ரெட்டை விட அதிகம் பெற்றிருக்கவேண்டும்
இந்த நான்கும் நடந்தால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்லும்