Skygain News

மாத விடாய் நாட்களில் வலியை போக்கும் மலிவான வழிகள்..!

மாதவிடாய் காலத்தில் வலியை குறைக்க ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை மோர் பருகலாம். வெள்ளை பூசணியை உணவில் சேர்த்துக்கொள்ளுதல், குளிர்ந்த நீரில் குளித்தல் மற்றும் தொப்புளில் விளக்கெண்ணெய் வைத்தல் ஆகியவையும் உடல் சூட்டைக் குறைத்து மாதவிடாய் காலத்தில் வலியை போக்கும் .

மாதவிடாய் காலத்தில் வலி மற்றும் அதிக ரத்தப்போக்கு தடுக்க, சிவப்பு நிற கைக்குத்தல் அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் நரக வேதனை வலிகூட பறந்து போய்விடும்.

அதேபோல் மாதவிடாய் காலத்தில் வலியை குறைக்க மாங்கொட்டை (அவித்ததோ அல்லது பச்சையாகவோ), மாதுளம் பழத்தின் உள்பகுதி தோல், வாழைப்பூ ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதிலிருக்கு துவர்ப்பு மாதவிடாய் காலத்தில் வலியை அடியோடு ஒழித்துவிடும்.

மாதவிடாய் காலத்தில் வலி மற்றும் மலசிக்கல் இல்லாமல் இருக்க நார்ச்சத்துள்ள பயிர் வகைகள் மற்றும் பழ வகைகளையும் உண்ணலாம். இதை உண்பதால் வயிற்றில் இருக்கும் கழிவுகள் மற்றும் கர்ப்பப்பை சுத்தமாகி மலச்சிக்கல் நீங்கும்.

மாதவிடாய் காலத்தில் வலியை குறைக்க கறிவேப்பிலையைத் தேங்காய் சேர்க்காமல் துவையல் செய்து சாப்பிட்டால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அனைத்து விதமான வலிகளுக்கும் தீர்வு கிடைத்து அந்த மூன்று நாட்களும் வலியின்றி சுகமாக கழிக்கலாம்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More