Skygain News

கொரோனாவை கண்டுபிடிக்கும் செல்போன் ‘செயலி’ யா..? அது என செயலி ! விவரம் இதோ

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறை இணை பேராசிரியராக பணிபுரிபவர் இலங்கையைச் சேர்ந்த ‘உடாந்த அபேவர்த்தனே’. இவர் தனது குழுவினருடன் இணைந்து, கொரோனோ வைரஸ் தொற்றுநோயைக் கண்டுபிடிக்கும் செல்போன் செயலிக்கான (ஆப்) தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார்.

அதன் அடிப்படையில் ‘ரெஸ்ஆப்’ என்ற செயலியை ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனை சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த செயலியானது, கொரோனாவை மட்டுமின்றி ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி போன்ற சுவாச வியாதிகளையும் கண்டுபிடித்துவிடும். இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல், காய்ச்சல் போன்ற எளிய அறிகுறிகளைக்கொண்டே ஒருவருக்கு கொரோனா மாதிரியான வியாதி ஏற்பட்டிருக்கிறதா, அது எந்த அளவு தீவிரமாக உள்ளது என்று இந்த செயலி தெரிவித்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்த செயலி 92 சதவீதம் துல்லியமாக முடிவுகளை வெளியிடுவதாகவும் இதை உருவாக்கியுள்ள நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், உலகின் மிகப்பெரிய உயிர் மருத்துவ தொழில் நிறுவனமான பைசர், இந்த செயலியை ரூ.1,474 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல்வேறு கட்ட பரிசோதனைகள், மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்புகளின் ஒப்புதலுக்கு பிறகே இந்த செல்போன் செயலி வெளிப்பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More