Skygain News

கைமாற போகும் ட்விட்டர் ? யார் அந்த புதிய நிறுவனர் ! விவரம் இதோ…

டெஸ்லா அமைப்பின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாத பங்கு விலை நிலவரப்படி 44 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய நிலவரப்படி மூன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் டிவிட்டரை வாங்குவதற்கு அந்த ஊடக நிறுவனத்தின் இயக்குனர்களிடம் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் குழு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அவை ஒப்பந்தமானது. அதற்கு முன்னதாக டிவிட்டரில் 9 சதவீத பங்குகளை வாங்கியிருந்த எலான் மஸ்க், அந்நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாராராக இருந்தார். இந்நிலையில், திடீரென டிவிட்டர் நிறுவனத்தை வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் கடந்த ஜூலை 10-ம் தேதி அறிவித்தார்.

டிவிட்டர் பணியாளர்களுடன் காணொலி மூலம் பேசிய எலான் மஸ்க், டிவிட்டர் சமூக வலைதளத்தில் போலிக் கணக்குகள் குறித்த முழு புள்ளி விவரம் மற்றும் புதிய போலிக்கணக்குகள் உருவானதை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் எனவும் டிவிட்டரை கையகப்படுத்துவதற்கு தடையாக பல பிரச்னைகள் இருப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில், எலான் மஸ்க் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியுள்ளதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என டிவிட்டர் நிறுவனம் தெரிவித்தது. மேலும் ஒப்பந்தத்தின்படி அவர் நிறுவனத்தை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று டிவிட்டரின் வாரியத்தலைவர் பிரட் டெய்லர் தெரிவித்தார். இதனிடையே, இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கழகத்தை வாங்க தயாராக இருப்பதாக எலான் மஸ்க் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

ஆனால், இது குறித்து டெஸ்லா பங்குதாரர்கள் உண்மைதானா என கேள்வி எழுப்பியதும் இல்லை இது நகைச்சுவையாக தெரிவித்தது என்றும், தான் எந்த விளையாட்டு அணியையும் வாங்க போவதில்லை என எலான் மஸ்க் அவர்களுக்கு பதிலளித்துள்ளார். இதையடுத்து, டிவிட்டரை வாங்கும் எலான் மஸ்க்கின் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக அந்நிறுவன பங்குதாரர்கள் வாக்களித்துள்ளனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More