இந்திய அணி இம்மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்கவுள்ள T20 உலகக்கோப்பைக்காக தீவிரமாக தயாராகி வருகின்றது. அந்த சமயத்தில் அனைவரையும் அதிர்ச்சியாக்கும் செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இந்திய ஸ்டார் பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக T20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளார்.
சமீபத்தில் ஜஸ்பிரீத் புப்ராவிற்கு லேசான காயம் தான் ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமாகிவிடுவார் என்றுதான் செய்திகள் வந்தன. சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்த ராகுல் டிராவிட், பும்ராவுக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது, டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க வாய்ப்புள்ளது எனக் கூறியிருந்தார்.
இதனால், பும்ரா உலகக் கோப்பையில் பங்கேற்பாரா, மாட்டாரா என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள்.இந்நிலையில் இந்நிலையில் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ‘‘காயம் காரணமாக, பும்ரா டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகிவிட்டார்.
I am gutted that I won’t be a part of the T20 World Cup this time, but thankful for the wishes, care and support I’ve received from my loved ones. As I recover, I’ll be cheering on the team through their campaign in Australia 🇮🇳 pic.twitter.com/XjHJrilW0d
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) October 4, 2022
மாற்று வீரரை விரைவில் அறிவிப்போம்’’ எனத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இந்திய பௌலிங் சற்று பலவீனமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது