இந்த டி20 உலக கோப்பைக்கான தொடர் நாயகனை தேர்வு செய்வதில் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது ஐசிசி. இந்த தொடரில் சிறப்பாக ஆடிய 9 வீரர்களை தேர்வு செய்து பட்டியலிட்டுள்ளது ஐசிசி. ரசிகர்களே வாக்களித்து தொடர் நாயகனை தேர்வு செய்யலாம்.மொத்தம் 9 வீரர்களை தொடர் நாயகன் விருதுக்காக ஐசிசி தேர்வு செய்துள்ளது.
இந்தியாவிலிருந்து விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் வீரர்கள் ஷதாப் கான், ஷாஹீன் அஃப்ரிடி ஆகிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்திலிருந்து அதிகபட்சமாக 3 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சாம் கரன், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர் ஆகிய மூவரும், இலங்கை ஸ்பின்னர் வனிந்து ஹசரங்கா மற்றும் ஜிம்பாப்வே ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா என மொத்தம் 9 வீரர்களை ஐசிசி தொடர் நாயகன் விருதுக்கு தேர்வு செய்துள்ளது.
இந்த 9 வீரர்களில் ரசிகர்களின் அதிக வாக்குகளை பெறும் வீரர் தொடர் நாயகன் விருதைவெல்வார்.நாளை இறுதிப்போட்டி நடக்கவுள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரிடம் தொடர் நாயகன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜோஸ் பட்லர், சூர்யகுமார் யாதவுக்குத்தான் தொடர் நாயகன் விருது வழங்கப்படவேண்டும். சூர்யகுமார் யாதவ் இந்த டி20 உலக கோப்பையில் முழு சுதந்திரத்துடன் பேட்டிங் ஆடினார். அவரது பேட்டிங்கை காண்பதே கண்கொள்ளா காட்சி. அவர் ஆடிய விதம் அபாரமானது என்றார்