நாயகன் படத்திற்கு பிறகு சுமார் 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் கமல் மற்றும் மணிரத்னம் இணைந்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
உதயநிதி தயாரிப்பில் உருவாக உள்ள பிரம்மாண்ட படைப்பு தான் கமல்ஹாசனின் 234-வது படம். மணிரத்னம் இயக்கத்தில் தயாராக உள்ள இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் சேர்த்து தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமீபத்திய தகவல்படி இப்படத்தில் மணிரத்னமும், கமல்ஹாசனும் சம்பளமே வாங்காமல் பணியாற்ற உள்ளார்களாம்.

ஏனெனில் இப்படத்தின் அவர்கள் இருவரும் பார்ட்னராக இருப்பதனால் வரும் லாபத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை பெற்றுக்கொள்ள உள்ளார்களாம்.