Skygain News

வேட்டையாடு விளையாடு 2 படத்தின் கதை இதுதான்..தரமான சம்பவம் லோடிங்..!

உலகநாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்தை தொடர்ந்து ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார். கடந்த 2018 ஆம் ஆண்டே துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில பிரச்சனைகளால் நிறுத்தப்பட்டது. தற்போது சுமுகமான பேச்சுவார்த்தைகள் எட்டப்பட்டு மீண்டும் படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மலையாள திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வரும் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் கமல். மேலும் விக்ரம் படத்தின் அடுத்த பாகத்திலும் கமல் நடிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. இந்நிலையில் கமல் மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்க தற்போது இப்படத்தின் ஒருவரி கதை வெளியாகியுள்ளது.

என்னவென்றால் கமல் நடித்த ராகவன் கதாபாத்திரம் ஓய்வு பெற்றுவிடுவாராம். பின்பு ஒரு முக்கிய புள்ளியின் கொலையை கண்டுபிடிக்க அரசாங்கம் ஓய்வு பெற்ற ராகவனின் உதவியை நாடுகின்றது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே வேட்டையாடு விளையாடு 2 படத்தின் கதைக்கரு என ஒரு தகவல் இணையத்தில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More