காஞ்சிபுரம் மாநகராட்சி 33வது வார்டுக்கு உட்பட்ட விளக்கடி கோவில் தெருவில் ரூ.25லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மழை நீர் வடி கால்வாய் பணியினை காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, ஆணையர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் மழை நீர் வடிகால்வாயின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இவ்ஆய்வின் போது வட கிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், விரைந்து பணியை முடிக்க வேண்டும் எனவும், பொது மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அதற்கான தடுப்புகளை அமைத்து பணிகளை மேலும் விரைவாக துரிதப்படுத்த வேண்டும் என காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் அறிவுறுத்தினார்.