சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரை சேர்ந்தவர் தங்கராஜ் மாணிக்கவல்லி தம்பதியினர் . தங்கராஜ் பிரான்சில் பணிபுரிந்து வருகிறார் இவர்களது மகன் கலைராஜன் பிரான்சில் உள்ள கல்லுரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார் .
அவர் படித்த அதே கல்லுரியில் ஜான்லுயிக்-வெரோணிக் தம்பதியின் மகள் கயல் சைக்காலஜி படித்து வந்துள்ளார் . இந்நிலையில் கலை ராஜனும் பிரான்ஸ் நாட்டு தம்பதிகளின் மகள் கயலும் நண்பர்களாக பழகி அவர்களுக்குள் அது காதலாக மலர்ந்துள்ளது .
மூன்றாண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரில் உள்ள கலைராஜனின் சொந்த கிராமத்தில் அவரது வீட்டில் கயலின் தாய் சகோதரி,கலைராஜனின் உறவினர்கள் முன்னிலையில் தமிழர் பாரம்பரிய முறைப்படி வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது .