தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களில் மூலம் ரசிகர்களை பெற்றவர் நடிகர் கார்த்தி. பருத்திவீரன் படத்தில் அறிமுகமான கார்த்தி தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக ஜொலித்துக்கொண்டிருக்கின்றார். கமர்ஷியல் படங்களாக இருக்கட்டும், வித்யாசமான கதைக்களங்கள் உள்ள படமாக இருக்கட்டும் அனைத்திலும் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்து விடுபவர் தான் நடிகர் கார்த்தி.
இந்நிலையில் சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமான் திரைப்படம் வாசு ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அடுத்ததாக பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் அவர் நடிப்பில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பிராமணமாக நடைபெற்றது. இந்த விழாவில் இந்த படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் என அனைவருமே கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்கள் கேள்விக்கு பிரபலங்கள் அனைவரும் பதிலளித்தனர்.
அந்த வகையில் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் கார்த்தியிடம், பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்ப அவரும் மிகவும் பொறுமையாக பதில் கூறினார். அதில் ஒருவர் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திலேயே நீங்க சோழனாக நடித்தீர்களே என கேட்க, “நான் சோழ தூதுவனாக தான் நடித்தேன், நீங்க போய் முதலில் கதையை புரிந்து கொண்டு வாங்க” என ஜாலியாக கிண்டல் செய்துள்ளார் கார்த்தி.