Skygain News

கோலியின் இடத்திற்கு ஆபத்து..உஷாராகும் கிங் கோலி..!சவால்விடும் இளம் வீரர்..!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என பெயரெடுத்த விராட் கோலிக்கு கடந்த சில ஆண்டுகாலமாகவே சோதனைக்காலம் என்றுதான் சொல்லவேண்டும். சதத்திற்கு மேல் சதம் அடித்து வந்த கோலி கடந்த மூன்று ஆண்டுகாலமாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

மேலும் அவரின் ஆட்டமும் முன்பு போல் இல்லை, தடுமாற்றமாகவே இருக்கின்றது என அனைத்து விமர்சகர்களும் ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர். இது போதாது என அவரிடமிருந்து கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் நடத்த ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் என்னதான் கோலி அரைசதம் அடித்திருந்தாலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருந்தது.

லீக் சுற்றில் ஹாங்ஹாங் அணிக்கு எதிரான போட்டியில் ஓபனர் கே.எல்.ராகுல், ஒன் டவுன் பேட்டர் விராட் கோலி இருவரும் 11ஆவது ஓவர்வரை 100-க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி ஷாக் கொடுத்தனர். இதனால், இந்தியா 160 ரன்களை தொடுவதே கடினம் என்ற நிலை வந்தபோது, அடுத்துக் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் தலா 6 சிக்ஸர், பவுண்டரிகள் உட்பட 68 ரன்களை குவித்து அசத்தினார்.

இதனால், இந்தியா 190 ரன்களை எடுத்தது.இந்நிலையில் இதுபோல இனி வரும் போட்டிகளில் நடந்தால் T20 போட்டியில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று தெரிகின்றது. அதாவது கே.எல்.ராகுலுக்கு பதிலாக கோலியை ஒப்பனராக களமிறக்கி அவரின் ஆஸ்தான இடமான நம்பர் 3 இல் சூரியகுமார் யாதவ் ஆட வைக்க இந்திய அணி நிர்வாகம் யோசனை செய்து வருவதாக தெரிகின்றது. எனவே கோலி வரும் போட்டிகளில் அதிரடியாக ஆடாவிட்டால் அவரின் இடம் பறிபோகும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More