விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட கோரையாற்றில் அதிக தண்ணீர் வந்ததால் ஏனாதிமங்கலம் -மாரங்கியூர் இணைப்பு தரைப்பாலம் இந்தாண்டு ரூபாய் 24 லட்சம் மதிப்பீடு தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வருவது அதிகரித்துள்ளது இதனால் ஏனாதிமங்கலம் மாரங்கியூர் இடையே அமைக்கப்பட்ட தரைப்பாலும் மீண்டும் கோரையாற்று வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டது.
இதனால் அப்பகுதியில் வசித்து வரும் பல கிராமத்து மக்கள் 10 கிலோமீட்டர் சுத்தி வெளியே வர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது .