Skygain News

போனா போகட்டும்…ஐ. டோண்ட் கேர் ! ஊழியர்கள் ராஜினாமா குறித்து பேசிய எலான் மஸ்க்…

எத்தனை ஊழியர்கள் பணியிலிருந்து விலகினாலும் கவலைப்பட போவதில்லை என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் என்பவர் ட்விட்டர் என்ற சமூக வலைத்தளத்தை கடந்த மாதம் 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கினார். தற்போது ட்விட்டர் நிறுவனத்தில் அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார்.

இந்த நிறுவனத்தில் சர்வதேச அளவில் 7 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களில் பாதிப்பேரை பணிநீக்கம் செய்தார் எலன். மேலும் ட்விட்டரை லாபநோக்கத்தில் செயல்பட வைக்க கடுமையாக உழைக்க வேண்டும் என ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்கள் ஒவ்வொருவரும் அலுவலகத்துக்கு வந்து வாரத்தில் 40 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்றார்.

இதற்கிடையே, கடினமாக உழைக்க தயாராக இருப்பவர்கள் மட்டும் பணியில் நீடிக்குமாறும், மற்றவர்கள் 3 மாத சம்பளத்துடன் விலகிக் கொள்ளுமாறும் கூறிய எலான் மஸ்க், இதுகுறித்து முடிவு எடுக்க கெடு விதித்தார். கெடு முடிந்த நிலையில், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ட்விட்டரில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். கொத்து கொத்தாக விலகி வரும் ஊழியர்கள் டுவிட்டரிலேயே ‘குட் பை’ எமோஜிகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து எலான் மஸ்க் கூறுகையில், ”சிறந்த ஊழியர்கள் பணியில் நீடிக்கிறார்கள். அதனால் பெரிய அளவில் கவலைப்பட மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More