Skygain News

நாளை ஒரு மாவட்டத்திற்கு மட்டும் மதுபான கடைகள் மூடல்..! விவரம் இதோ

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதேபோல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடைபெறவுள்ளது. இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மது விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அன்றைய தினம், தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபானக் கடைகளும் மற்றும் மதுபானக் கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். மதுபானம் விற்பனை, மது பானத்தை கடத்துதல், அவற்றை பதுக்கி வைத்தல் போன்றவை கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கடுமையாக எச்சரித்துள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More