Skygain News

த்ரிஷாவிற்கு வித்யாசமான கண்டிஷன் போட்ட மணிரத்னம்..இது கொஞ்சம் ஓவர் தான்..!

மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை தான் இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘பொன்னியன் செல்வன்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம்.மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அண்மையில் இந்தப்படத்தின் படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தற்போது படத்தின் புரோமோஷன் பணிகள் படுஜோராக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ஐஸ்வர்யா ராயுடன் சிரித்து பேசக்கூடாது என்று திரிஷாவிற்கு கண்டிஷன் போட்டாராம் மணிரத்னம். படத்தில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் நடித்துள்ளனர்.

இதனால் ஐஸ்வர்யாவும், திரிஷாவும் படப்பிடிப்பு தளத்தில் சிரித்து பேசிக்கொண்டால், நந்தினியும் குந்தவையும் எதிரிகள். இப்படி ஜாலியாக உட்கார்ந்து பேசக்கூடாது. அந்த கதாபாத்திரங்களாகவே செட்டில் இருங்கள் என மணிரத்னம் கூறுவாராம். இதனை நடிகை திரிஷா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More