Skygain News

பொன்னியின் செல்வன் படத்திற்காக மணிரத்னம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை இணைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் மணிரத்னம்.

ஒட்டுமொத்த இந்தியர்களும் எதிர்பார்த்த இப்படத்தை லைக்கா நிறுவனமும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை கடந்த ஐந்து நாட்களில் இப்படம் 250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.


மேலும் இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை புரியும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.இந்நிலையில் இப்படத்தை இயக்கிய இயக்குனர் மணிரத்னத்தின் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது மணிரத்னம் இப்படத்திற்காக சம்பளமாக எந்த தொகையையும் வாங்கவில்லையாம்.படத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை தான் சம்பளமாக வாங்கப்போவதாக முடிவெடுத்தாராம். எனவே மிகப்பிரம்மாண்டமான படைப்பை உருவாக்கிய மணிரத்னம் சம்பளமாக ஒரு தொகையை பேசாது வேலை செய்தது ரசிகர்களை ஆச்சர்யத்திற்கு உண்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More