Skygain News

சிலம்பாட்டம் ஆடி மாற்றுத்திறனாளி மாணவர்களை மகிழ்வித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்..!

விழுப்புரம் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் செஞ்சி வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து மாணவர்களுடன் சிலம்பாட்டம் ஆடி மாற்றுத்திறனாளி மாணவர்களை மகிழ்வித்தார். தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பரிசுகள் வழங்கினார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More