Skygain News

கோவையில் கலக்கட்டிய தீபாவளி பர்சைஸ்..! புதிதாக 2,3 நாட்களுக்கு வரப்பட்ட கோவை மாநகர உத்தரவு

இன்னும் 2,3 நாட்களே இருக்கும் தீபாவளி பண்டிகைக்கான புது ஆடைகள் மற்றும் சில பல பொருட்களை வாங்க கூட்டம் இரண்டு வாரத்துக்கு முன்னிருந்தே பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அவர்களின் ஊரில் வாங்க செல்கிறது நாம் பார்க்கலாம். இதையடுத்து கோவை மாநகரில் உள்ள பல்வேறு நகை மற்றும் ஜவுளிக்கடைகளுக்கு பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்ட நெரிசலில் அவதி படுவது காணப்பட்டது. அலுவலகங்களில் பணிபுரிவோரும் தங்களின் பணி பாதிக்காத வகையில் தங்களின் பணி நேரம் முடிந்த பிறகு இரவில் கடைவீதிகளுக்கு வந்து தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வதற்கு வசதியாக கடைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் வியாபார நேரத்தை அதிகரிப்பது குறித்து கோவை மாநகரில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் கோவை மாநகர ஜவுளி வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுடன் இன்று கோவை மாநகர காவல் துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து மேற்படி ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, கோவை மாநகரில் தீபாவளி பண்டிகை வரை அனைத்து வியாபார தளங்களும் இரவு 1 மணி வரை செயல்படவேண்டும். மேலும், பொதுமக்கள் வியாபார தளங்களுக்கு வருகை புரிந்து இரவு 1 மணி வரை பொருட்களை வாங்கி செல்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் கோவை மாநகரின் அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்படும் என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More