Skygain News

நாட்டாமை மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக காவல் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியரை கண்டித்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம்..!

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த விழுந்தமாவடி கிராமத்தில் அப்பகுதி உள்நாட்டு மீனவர்கள் சக்கிலியன் ஆற்றில் மீன், இறால் பிடித்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஆற்றில் தடுப்பு அமைக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் இரண்டு வருடத்திற்கு முன்பு ஆற்றில் கட்டப்பட்டிருந்த வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை ஆற்றங்கரையோரம் உள்ள அவர்களது கொட்டகையில் பாதுகாப்பாக பூட்டி வைத்திருந்தனர்.

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்றில் வலைகள் கட்டப்பட்டிருக்கிறதா என கீழ்வேளூர் வட்டாட்சியர் ரமேஷ் தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்கள் காவல்துறை உதவியுடன் அங்கு ஆய்வு செய்தனர். அப்போது, இரண்டு வருடத்திற்கு முன்பு அங்குள்ள கொட்டகையில் கிராம கட்டுப்பாட்டின் பேரில் பூட்டி வைத்திருந்த மீன்பிடி வலை உள்ளிட்ட உபகரணங்களை பூட்டை உடைத்து கைப்பற்றி எடுத்து சென்றனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த விழுந்தமாவடி கிராம தலைமை நாட்டாமை பூமாலை மற்றும் உள்நாட்டு மீனவர் சங்க இயக்குநர் மாரியப்பன் இருவரும் வட்டாட்சியரிடம் பூட்டப்பட்ட கொட்டையிலிருந்து பூட்டை ஏன் உடைத்தீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளனர் .இந்த நிலையில் அவர்கள் இருவர் மீது கீழ்வேளூர்  வட்டாட்சியர் ரமேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் கீழையூர் காவல்துறையினர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனை கண்டித்து விழுந்தமாவடி உள்நாட்டு மீனவர் சங்கம் மற்றும் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றனர்‌. நாகை – வேதாரண்யம் சாலையில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமார் தலைமையிலான சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஒரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More