Skygain News

பயணிகளின் நலன் கருதி மோட்டார் வாகன விதிகளில் திருத்தம்..! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிக்கை..

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது : வாகனத்தில் பயணிக்கும் ஆண் பயணி, முறைத்துப் பார்த்தல், கூச்சலிடுதல், விசில் அடித்தல், கண் சிமிட்டுதல், பாலியல் ரீதியாக புண்படுத்தக்கூடிய சைகைகள், பாடல் பாடுதல், வார்த்தைகளை உச்சரித்தல், புகைப்படங்கள் எடுத்தல் கூடாது.

வாகனத்தில் பயணிக்கும் பெண் பயணிகளை எரிச்சல் ஏற்படுத்துதல் கூடாது. நடத்துனர் எச்சரிக்கை விடுத்தப் பிறகு, புகாருக்குள்ளான பயணியை இறக்கிவிடலாம் அல்லது வழியில் உள்ள ஏதேனும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம்.

பெண் பயணிகள் வாகனத்தில் ஏறவோ, இறங்கவோ உதவும்போது தவறான நோக்கில் தொடக்கூடாது. பெண் பயணி வாகனத்தில் பயணிக்கும் போது, பயணத்தின் நோக்கம் குறித்து பொருத்தமற்ற கேள்விகள் கேட்கக்கூடாது. எந்தவொரு பயணிக்கும் எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. வாகனத்தில் புகார் புத்தகத்தை பராமரிக்க வேண்டும். காவல் அதிகாரிகள் கேட்கும்போது அந்த புகார் புத்தகத்தை அளிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More