ஐபிஎல் 2023ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடருக்கான ஆரம்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அதற்கான ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்களை அதற்கு முன் மாற்றி கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
எந்த வீரர்களை தக்க வைக்கிறோம், எந்த வீரர்களை விடுவிக்கிறோம் என்பதற்கான பட்டியலை பிசிசிஐயிடம் இன்று மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும்.இந்நிலையில் மும்பை அணியின் நட்சத்திர வீரரான பொலார்டை விடுவிக்க எம்.ஐ. நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.
2010 ஆம் ஆண்டு முதல் கடந்த 12 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் பொலார்டை கடந்த ஆண்டு 6 கோடி ரூபாய் கொடுத்து அந்த அணி தக்க வைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது