Skygain News

மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் இசைஞானி இளையராஜா..!

விளையாட்டு, சமூக சேவை ,பொழுதுபோக்கு , இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம்.

அந்தவகையில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார் . மேலும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய முன்னாள் தடகள வீராங்கணை பி.டி.உஷா,ஆந்திராவை சேர்ந்த திரைப்பட கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த திங்களன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பதவியற்றுக்கொண்டனர் . ஆனால் அன்று இளையராஜா மட்டும் பதவி ஏற்கவில்லை. இந்த நிலையில் மாநிலங்களவை எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜா இன்று பதவியேற்றுக் கொண்டார். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இளையராஜா தமிழில் உறுதி மொழி கூறி பதவி ஏற்றுக்கொண்டார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More