தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிங்கர்க்ளின் அமோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது. இதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் டிரெய்லர், புரோமோஷன் இல்லாமல் இன்று வெளியாகியுள்ளது ‘நானே வருவேன்’ படம். அதிகாலை நான்கு மணி காட்சிகள் இல்லாமல் காலை 8 மணியில் இருந்தே படத்தின் காட்சிகள் துவங்கியுள்ளன. ரசிகர்கள் ஆராவரத்துடன் படத்தின் ரிலீசை கொண்டாடி வருகின்றனர்.
அனைத்து தரப்பினரிடமிருந்து பாசிட்டிவான விமர்சனங்களை குவித்து வருகிறது.தனுஷ் நடிப்பில் மிரட்டியுள்ளதாகவும், செல்வராகவன் செமத்தியான கம்பேக் கொடுத்துள்ளதாகவும், யுவனின் இசை தீயாய் இருப்பதாகவும் படத்தை பார்த்தவர்கள் சமூக வலைத்தளங்களில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.
ஆராவாரம் இல்லாமல் வெளியாகியுள்ள ‘நானே வருவேன்’ படம் நிச்சயம் பந்தயம் அடிக்கும் என கொண்டாடி வருகின்றனர் தனுஷ் ரசிகர்கள். மேலும் இப்படமும் தனுஷிற்கு ஒரு ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.