Skygain News

தேசிய பொது மன்னிப்பு தினம்.5700 கைதிகளை விடுவித்த மியான்மர் அரசு

மியான்மரின் தேசிய பொது மன்னிப்பு தினத்தை முன்னிட்டு 5,744 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்.

மியான்மரில் 1 பிப்ரவரி 2021 அன்று நாட்டின் ஜனநாயக அரசாங்கத்திற்கு எதிரான சதிப்புரட்சிக்குப் பின்னர் இராணுவ ஆட்சி அமலில் உள்ளது. மியான்மருக்கான பிரிட்டனின் முன்னாள் தூதர் போமன், ஆகஸ்ட் மாதம் யாங்கூனில் அவரது கணவருடன் கைது செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலிய பொருளாதார நிபுணர் சீன் டர்னெல் என்பவரை பாதுகாப்புப் படையினர் செப்டம்பர் மாதம் யாங்கூனில் உள்ள ஒரு ஹோட்டலில் கைது செய்தனர். இரகசிய சட்டம் மற்றும் குடியேற்ற சட்டத்தை மீறியதற்காக அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதைப்போலவே இன்னும் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ராணுவத்தின் ஆட்சியின் கீழ் இவர்கள் பல இன்னல்களை அனுபவித்து வந்த நிலையில் தற்போது தேசிய பொது மன்னிப்பு தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யவுள்ளது மியான்மர் ராணுவ அரசு.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More