Skygain News

2.30 லட்சம் காகித படகுகள் மூலம் மாணவர்கள் உருவாக்கிய தேசிய கொடி: இந்திய சாதனை புத்தகத்தில் இடம்..!

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஹெப்பகோடியில் உள்ள தனியார் அகாடமி சார்பில் காகித படகுகள் மூலம் தேசிய கொடியை உருவாக்கும் முயற்சி நடந்தது. இதில் 1,683 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். மாணவ-மாணவிகள் காகிதத்தில் தேசிய கொடியை வரைந்து அதனை படகு போல வடிவமைத்து பிரமாண்ட தேசிய கொடியை உருவாக்கினர். சுமார் ஒரு மணி நேரத்தில் 2.30 லட்சம் காகித படகுகள் மூலம் தேசிய கொடியை மாணவ-மாணவிகள் உருவாக்கினர்.

மாணவ-மாணவிகளின் இந்த முயற்சி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. மேலும் இந்த சாதனையை பாராட்டி எலைட் வேர்ட் ரெக்கார்ட், ஆசிய ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்திய ரெக்கார்ட்ஸ் அகாடமி ஆகியவை மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி உள்ளன. மேலும் மாணவ-மாணவிகளின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More