Skygain News

தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டம் : பேரணியை தொடங்கி வைத்த துணை நிலை ஆளுநர் தமிழிசை

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின ஓட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தர் வல்லபாய்படேல் பிறந்த நாளை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி6 புதுச்சேரியில் அரசு சார்பில் தேசிய ஒற்றுமை தினம் கடற்கரை காந்தி திடலில் அனுசரிக்கப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த சர்தார் வல்லபாய்பட்டேல் படத்துக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை துணைநிலை ஆளுநர் வாசிக்க அனைவரும் ஏற்றனர். அதன் தொடர்ச்சியாக மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள், பங்கேற்ற ஒற்றுமை தின பேரணியையும் துணைநிலை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More