தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நானும் ரவுடி தான் படத்தின் போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. பின்பு ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்தனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இவர்களின் திருமணம் படு விமர்சையாக நடந்து முடிந்தது. திருமணத்தை முடித்த பிறகு மாதக் கணக்கில் ஹனிமூனை கொண்டாடிய விக்கியும் நயனும் சமீபத்தில்தான் சென்னை திரும்பினர்.சென்னை திரும்பிய வேகத்தில் தானும் நயன்தாராவும் அப்பா அம்மா ஆகிவிட்டதாக குட் நியூஸை கூறி திக்குமுக்காட வைத்துள்ளார் விக்னேஷ் சிவன்.
இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக இன்ஸ்டாகிராம்மில் அறிவித்துள்ள விக்னேஷ் சிவன், தங்கள் குழந்தைகளின் பாதங்களை தானும் நயன்தாராவும் பற்றியிருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.விக்னேஷ் சிவனின் இந்த பதிவு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிதான்.
Nayan & Me have become Amma & Appa❤️
— Vignesh Shivan (@VigneshShivN) October 9, 2022
We are blessed with
twin baby Boys❤️❤️
All Our prayers,our ancestors’ blessings combined wit all the good manifestations made, have come 2gethr in the form Of 2 blessed babies for us❤️😇
Need all ur blessings for our
Uyir😇❤️& Ulagam😇❤️ pic.twitter.com/G3NWvVTwo9
திருமணம் ஆகியே 4 மாதங்கள்தான் ஆகிறது அதற்குள் எப்படி இரட்டை குழந்தைகள் என ஷாக்காகியுள்ளனர் நெட்டிசன்கள். வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் நயன்தாரா.இதற்கு ஒரு பக்கம் வாழ்த்துக்களும் ,மறுபக்கம் சர்ச்சைகளும் குவிந்து வருகின்றன