தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. ஐயா படத்தில் ஆரம்பமான இவரது திரைப்பயணம் கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் நாயகியாக மட்டுமே நடித்து வந்த நயன்தாரா தற்போது முதன்மையான கதாபாத்திரங்களிலும், சோலோ ஹீரோயினாகவும் நடித்து வருகின்றார்.
தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருக்கின்றார் நயன்தார. .இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வருகின்றார்.
இதனை தொடர்ந்து சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை தொடர்ந்து பிசினஸில் முதலீடு செய்து வருகின்றனர் விக்கியும் நயன்தாராவும். அந்த வகையில் துபாயில் இயங்கி வரும் மசாலா பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் நயன்தாரா முதலீடு செய்துள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
அதன்பிறகு தோல் மருத்துவரான ரெனிடா ராஜனுடன் இணைந்து அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியை தொடங்கினார் நயன்தாரா. இதற்கு ‘தி லிப் பாம் கம்பெனி’என்ற பெயரை வைத்தார். இந்நிலையில் தற்போது புதிய தொழில் ஒன்றில் முதலீடு செய்து பார்ட்னராகியுள்ளார் நயன்தாரா.சென்னையை தலைமை இடமாக கொண்ட சாய் வாலே என்ற நிறுவனத்தில் முதலீடு செய்து பார்ட்னராக சேர்ந்துள்ளார் நயன்தாரா.
இதே கம்பெனியில் நயன்தாராவின் கணவரான விக்னேஷ் சிவனும் முதலீடு செய்துள்ளார். இருவரும் தலா 5 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சாய் வாலே நிறுவனத்திற்கு சென்னையில் அண்ணா நகர், கீழ்பாக்கம், ஆழ்வாபேட், அடையார் என 20 இடங்களில் கிளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.