Skygain News

நயன்தாராவின் குழந்தைகளுக்கு வாடகை தாயாக இருந்தது இவரா ?

தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனின் மீது காதல் கொண்டார். இருவரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் ஆகும் நிலையில் விக்னேஷ் சிவன் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக இன்ஸ்டாகிராமில் போட்டோவுடன் பதிவிட்டார். அவர்கள் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றது அதன் பின் தான் தெரியவந்தது.திருமணம் ஆகி 5 வருடங்கள் குழந்தை இல்லாதவர்கள் தான் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற முடியும் என சட்டம் இருக்கும்போது இவர்கள் எப்படி 4 மாதங்களில் பெற்றார்கள் என சர்ச்சை எழுந்தது.

அது பற்றி விளக்கம் கேட்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சரும் தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் அந்த இரட்டை குழந்தைகளுக்கு வாடகைத்தாயாக இருந்தது யார் என்கிற விவரம் தற்போது கசிந்திருக்கிறது.

கேரளாவில் நயன்தாராவின் உறவினர் ஒருவர் தான் வாடகைத்தாயாக இருந்திருக்கிறார் என கூறப்படுகிறது.மேலும் இரு வீட்டாரின் அனுமதி பெற்றே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றிருக்கின்றார் நயன்தாரா என்ற தகவலும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More