Skygain News

மின்சார கம்பத்தின் மீது தார்ச்சாலை..! அலட்சியத்தால் அவதிப்படும் நெல்லை மக்கள்..

தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் 8ம் தேதி நெல்லையில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கலந்துகொள்ள உள்ளார் . இதனை முன்னிட்டு நெல்லை மாநகரில் கடந்த 10 ஆண்டுகளாக குண்டு குழியுமாக காட்சியளிக்கப்பட்ட மாநகர சாலைகளை மாநகராட்சி நிர்வாகம் அவசர அவசரமாக சாலைகளை புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. முதல்வர் வருகைக்கான நாட்கள் குறைவாக இருப்பதால் சாலைகள் செப்பனிடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் செல்லக்கூடிய பிரதான சாலையில் சாலை நடுவே உள்ள மின்கம்பத்தை முறையாக அகற்றாமல் சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று உள்ளது.

இதன் காரணமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே உள்ள இந்த பிரதான சாலையில் எந்நேரமும் விபத்து ஏற்படலாம் என்ற பதட்டமான சூழல் உருவாக்கி உள்ளது.

இதானால் சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் மின்கம்பத்தை அகற்றி சாலையை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அபபகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More