தமிழகத்தில் பள்ளி வாகனங்கள் விபத்தில் சிக்கி மாணவர்கள் உயிரிழப்பு ஏற்படும் சூழல் கடந்த சில மாதங்களாக அதிகமாக வருகிறது. இதை தடுக்கும் வகையில் அனைத்து பள்ளி பேருந்துகளிலும் கேமரா சென்சார் பொருத்துவதை கட்டாயமாக தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. மேலும் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை மேற்கொள்வதற்கான வரைவு கடந்த ஜூன் 29ஆம் தேதி அரசாணை மூலம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் 29ஆம் தேதி கருத்துக் கேட்பு நடத்தப்பட்டு முடிவு அடைந்தது.

இதன் தொடர்பாக அரசின் ஒப்புதலும் பெறப்பட்டு இதன் தொடர்ச்சியாக இந்த உத்தரவு தற்போது அரசாணை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனிவரும் நாட்களில் விபத்தை தடுக்கும் வகையில் பள்ளி பேருந்துகளில் முன்புறமும், பின்புறமும் கேமராவும், பின்பகுதியில் சென்சார் கருவியும் கட்டாயம் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
