Skygain News

75 வது சுதந்திர தினத்தையொட்டி அனைத்து மக்களும் நல்லுறவுடன் வாழ வேண்டி 1008 திருவிளக்கு பூஜை…! சிவகங்கை அருகே ஏராளமான பெண்கள் பங்கேற்பு…

சிவகங்கை மாவட்டம், சிரமம் அருகே உள்ள கோவிலில் நாட்டின் 75 வது சுதந்திர தினத்தில் அனைத்து மக்களும் நல்லுறவுடன் வாழவேண்டியும், உலக நன்மைக்காகவும் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்ற நிலையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

சிரமம் கிராமத்தின் அருகேவுள்ளது கொங்கேஸ்வரன் கோவில். இங்குள்ள ஏழுமுக காளியம்மன் சன்னிதானத்தில் ஆண்டுதோறும் ஆடி மாத பெளர்ணமி அன்று உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும்.

இந்நிலையில் இன்று ஆடி மாத் பெளர்ணமி என்பதால் 1008 திருவிளக்கு பூஜையானது நடைபெற்றது. குறிப்பாக இந்த ஆண்டு நாடு தனது 75 வது சுதந்திர தின பவள விழாவை கொண்டாட உள்ள நிலையில் சாதி, மதம் கடந்து அனைத்து தரப்பு மக்களும் நல்லுறவை பேணி வாழவும் உலக நண்மை வேண்டியும் இந்த திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று தனது குடும்பத்தினர், 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்திய மக்கள், உலக மக்கள் என அனைவரின் வாழ்க்கையும் செழித்து நன்மையுடன் வாழ வேண்டி பல்வேறு பூஜைகளை செய்தனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More