Skygain News

திருச்சி விமான நிலையத்தில் கிடைத்த ஒரு கிலோ தங்கம் கட்டிகள்..!

மலேசியா கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் உள்ள பயணிகளின் உடமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனையிட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு பயணியின் உடமைகளை சோதனை செய்த போது அதில் 517.500 கிராம் கடத்தல் தங்கம் இருத்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் துபாயில் இருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பயணிகளின் உடமைகளை சோதனை செய்த போது பயணி ஒருவரின் உடமையில் 526.500 கிராம் கடத்தல் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 34 லட்சத்து 72 ஆயிரத்து 613 ரூபாய் ஆகும். மொத்தமாக சுமார் ஆயிரம் கிராம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ள திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு போலீசார், 2 ஆண் பயணிகளிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More