Skygain News

மக்களே உஷார் : அடுத்த 4 நாட்களுக்கு இந்த 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தென்மேற்கு வங்கக்கடலில் நவம்பர் 9-ஆம் தேதி உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் வரும் 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 29ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழைப் பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதன் தொடர்ச்சியாக குமரி கடல் பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் மிதமானது வரை கனமானது வரை மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் நவம்பர் 9ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது இதனால் அடுத்த 2 நாட்களில் (48 மணி நேரத்தில்) வட மேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நவம்பர் 14ம் தேதி வரை கனமழை பெய்யலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 4 நாட்களுக்கு செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More