Skygain News

ராணிப்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

ராணிப்பேட்டையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது .இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை முதியோர் மற்றும் விதவை ஆகிய உதவித் தொகைகள்,புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுவட்டார பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது தனி கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவு விட்டார்.

இந்த நிகழ்வில் ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்..

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More