மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகியுள்ள இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் முதல் நாளில் உலகளவில் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்திருந்த இப்படம் இரண்டாம் நாள் முடிவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலை தாண்டி சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில், தற்போது மூன்றாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி விடுமுறை தினமான நேற்று இப்படம் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் மூன்று நாள் முடிவில் ரூ.230 கோடியை தாண்டி உள்ளது.
மூன்றே நாளில் 200 கோடிக்கு மேல் வசூலித்த முதல் தமிழ்படம் என்கிற சாதனையையும் இதன்மூலம் படைத்துள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம்.மேலும் அடுத்த வாரம் வரை பொன்னியின் செல்வன் படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடும் என எதிர்பார்க்கப்படுகின்றது