அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு குஜராத் மாநிலத்தில் ஏத்தா நகரில் இன்று தொடங்குகிறது. மத்திய சட்டம் மற்றும் சட்ட துறை அமைச்சர் , நீதித்துறை அமைச்சகம் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது நடைமுறைகளை இந்த மாநாட்டில் பகிர்ந்து கொள்ளவும் , புதிய யோசனைகளை சொல்வதற்கும் இதன் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே பரஸ்பரை ஒத்துழைப்பு மேம்படுத்த இந்த மாநாடு வழிவகுக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இன்று காலை 10 மணி அளவில் நடைபெறும் மாநாட்டில் தொடக்க அமர்வில் காணொளி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி உரையாடுவர். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் தெரிவித்து இருக்கிறது.