Skygain News

சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் கைதிகள் – சிறைத்துறைக்கு குவியும் கேள்விகள்..

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் கொலை கொள்ளை கடத்தல் வன்கொடுமை பாலியல் பலாத்காரம் உட்பட பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற விசாரணை கைதிகள் சுமார் 900 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர் .

இங்கு கைதிகளின் நன்னடத்தை குறித்து மாதந்தோறும் சிறை காவலர்கள் ஆய்வு செய்வது வழக்கம் அந்த வகையில் சிறை காவலர்கள் கைதிகளின் அறைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர் அந்த வகையில் வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்ற சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த செல்வம் என்ற பிரம்மா செல்வம் அறையை சோதனை செய்தபோது அதில் செல்போன் மற்றும் சிம் கார்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சிறை நிர்வாகம் சார்பில் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது அதன் பேரில் தற்போது காவல்துறையினர் பிரம்மா செல்வம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஏற்கனவே சிறைகளில் சில காவலர்களின் உதவியோடு கைதிகளுக்கு கஞ்சா போன்ற போதை பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது அதேபோல் கைதிகள் சிறையில் இருந்தபடியே செல்போன் உள்பட சகல வசதியுடன் வாழ்ந்து வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது மேலும் சிறைத்துறை டிஐஜி பழனி கடந்த 1ம் தேதி பாளையங்கோட்டை சிறையில் ஆய்வு மேற்கண்டோர் எனவே டிஐஜி ஆய்வு மேற்கொண்ட சில நாட்களிலேயே கைதியின் அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More