தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கே.ராஜன் பரபரப்பாக பல கருத்துக்களை கூறி வருபவர்.அந்த வகையில் தற்போது அவர் கூறிய கருத்து ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டி ஒன்றில் சினிமாவில் நடிகையாக வேண்டும் என்றால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துதான் ஆகவேண்டுமா? இந்த நிலையை தயாரிப்பாளராக நீங்கள் மாற்ற முடியுமா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கே ராஜன், வேறு வழியே இல்லை என்று தடாலடியாக கூறியுள்ளார். அந்த கரைக்கு போக வேண்டும் என்றால், நடுவில் இருக்கும் சேரை மிதித்துதான் போக வேண்டும். அதேபோல் சினிமாவில் பெரிய நடிகை ஆகவேண்டும் என்றால் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஒத்துக்கத்தான் வேண்டும் என்று கூறியுள்ளார்.இது தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது