தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த ஐந்து தினங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்திருந்தது.
சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த இரண்டு தினங்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மேலும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. கடலூர், மயிலாடுதுறை, ஈரோடு, பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.