Skygain News

மழை நீரால் சூழ்ந்துள்ள நெற்பயிர்கள்- சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை நீரால் சூழ்ந்துள்ள விவசாய நெற்பயிர்களை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பூண்டி கே.கலைவாணன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர், “இந்த ஆண்டு முன்பாகவே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதனால், காவிரி படுகையில் உள்ள அனைத்து இடங்களிலும் அமோகமாக நெல் விளைச்சல் ஏற்பட்டுள்ளது.

எதிர்பாராத விதமாக கடும் மழை பெய்த காரணத்தினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மிகுந்த சேதம் அடைந்துள்ளன. சேதம் அடைந்த நெருப்பயிர்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த அறிக்கை மாண்புமிகு தமிழக முதல்வரிடன் சமர்ப்பிக்கப்பட்டு, இதற்கான நிவாரணம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More