மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல நட்சத்திரங்களின் நடிப்பில் இந்தியாவே எதிர்பார்க்கும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தை லைக்கா நிறுவனமும் மணிரத்னமும் இணைந்து தயாரித்து வருகின்றனர்.
மணிரத்னம் பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் பல வருட போராட்டத்திற்கு பிறகு தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை வெற்றிகரமாக இயக்கியுள்ளார்.
இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி பல மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் மிகப்பிரமாண்டமாக நடைபெற இருக்கின்றது. இந்த விழாவிற்கு உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது.
பல வருடங்கள் கழித்து இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.லைக்கா நிறுவனமும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து மிகப்பெரிய பொருட்ச்செலவில் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகத்தரத்தில் உருவாகி இருக்கின்றது.மேலும் இத்திரைப்படம் தமிழ் திரையுலகிற்கு பெருமையை சேர்க்கும் எனவும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது