ரஜினி தற்போது பிசியாக ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகின்றது. சென்னையில் கடந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இதனிடையே ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றார். கடந்த 2019ஆம் ஆண்டு விசாகன் வணங்காமுடி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் சவுந்தர்யா. இந்நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது.
தனது மகனுக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என பெயரிட்டுள்ளார் சவுந்தர்யா . சவுந்தர்யாவுக்கு மகன் பிறந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வந்தனர். இந்நிலையில் சவுந்தர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள பதிவு ஒன்று இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.
சௌந்தர்யாவின் மகனை ரஜினி ஆசையாக பார்க்கும் புகைப்படம் தான் அது. தற்போது இப்புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.