இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வர மீனவர்கள், இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக ராமேஸ்வரம் துறைமுக கடல் பகுதியில் 800-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் சுமார் 10,000 கும் மேற்பட்ட மீனவர்களும் அதைச் சார்ந்த தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர்.