Skygain News

இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர்தான்..அடித்து கூறிய அஸ்வின்..!

இந்திய அணியில் ருநாள் அணிக்கு மட்டும் ரோஹித் ஷர்மாவை கேப்டனாக நியமித்துவிட்டு டெஸ்ட், டி20 அணிகளுக்கு புது கேப்டன் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய ஹார்திக் பாண்டியாவுக்குத்தான், டி20 அணிக் கேப்டன் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசிய அஸ்வின், உண்மையில், ஹார்திக் பாண்டியா தோனிக்கு நெருக்கமானவர் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். தோனியிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளதாக ஹார்திக் பாண்டியா பலமுறை கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல, தோனியிடம் கற்றுக்கொண்ட விஷயங்களை அவர் போட்டியின்போது செயல்படுத்தி வெற்றியும் கண்டிருக்கிறார்.

பிரச்சினைகளை மிகவும் நேர்த்தியாக கையாள்கிறார்” எனக் கூறினார்.‘மேலும், தோனியைப் போலவே கேப்டனாக எனது அறை எப்போது வேண்டுமானாலும் திறந்திருக்கும் எனவும் பாண்டியா கூறியிருந்தார். இப்படி தோனிக்கும், ஹார்திக் பாண்டியாவுக்கும் பல விஷயங்கள் ஒத்துப்போவதால், இந்திய டி20 அணியில் கேப்டனாக ஹார்திக் பாண்டியாவில் சிறப்பாக செயல்பட முடியும்” என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More