பத்திரம் பெயர் மாற்றம் செய்ய ரூபாய் 50 ஆயிரம் லஞ்ச்ம் பெற்ற சார்பதிவாளர் உள்ளிட்ட இரண்டு பேரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
சேலம் குகை பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவர் தனது தாயார் பெயரில் உள்ள நிலத்தை வாரிசுதாரரான தன் பெயருக்கு மாற்ற சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது அதற்காக லஞ்சம் கேட்பதாக பழனிவேல் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.. லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழிகாட்டுதல்படி பழனிவேல், இடைத்தரகர் கண்ணன் என்பவரிடம் ரூ 50 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். அந்த தொகையை இடைத்தரகர் கண்ணன், தாதகாப்பட்டி சார் பதிவாளர் செல்லபாண்டி கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் இருவரையும் கையும் களவுமாக சுற்றிவளைத்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பழனிவேல் அளித்த புகாரின் பேரில் இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்