தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது இதனால் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதல் கட்டமாக 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து நீர் வரத்து வந்து கொண்டிருப்பதாலும் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருப்பதாலும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பதை 500 கன அடியாக உயர்த்த காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார் இதன் பேரில் இன்று காலை 10 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 500 கன அடியாக உயர்த்தி திறக்கப்படது.
இந்நிலையில் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயரம் 21.3 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2862 மில்லியன் கம அடியாகவும், நீர் வரத்து 400 கன அடியாகவும் உள்ளது செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் உபநீர் திறப்பது அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வரும் நாட்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மூன்றாவது செட்டரின் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது