இந்திய அணி தொடர்ச்சியாக பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து தென்னாப்ரிக்காவுடன் மோதவுள்ளது.இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அரை இறுதி வாய்ப்பு இந்தியாவிற்கு பிரகாசமாகிவிடும்.
ஆனால் இந்த போட்டியில் அணியில் சில மாற்றங்கள் நிகழ்த்தப்படும் என்ற தகவல் வந்துள்ளது.இந்தியாவை போலவே தென்னாப்பிரிக்க அணியும் பேட்டிங் மற்றும் பவுலிங் என அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறது. ரன் ரேட்டிலும் +5.200 என அட்டகாசமான நிலையில் உள்ளது.
இந்த அணியை சமாளிக்க வேண்டுமென்றால் இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டி அதிக ரன்களை குவிக்க வேண்டும். அதற்கு முதல் சிக்கலாக இருப்பது இந்தியாவின் ஓப்பனிங் தான்.ரோகித் சர்மா நல்ல ஃபார்மில் உள்ள போதும், கே.எல்.ராகுல் சொதப்பி வருகிறார்.
அதுவும் புதிய பந்தில் வரும் இன் ஸ்விங் பந்துகளில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வருகிறார். இந்நிலையில் அவரின் பிரச்சினையை சரி செய்ய ரிஷப் பண்ட்- ஐ உள்ளே கொண்டு வர ரோகித் சர்மா திட்டமிட்டுள்ளார் என தெரிகின்றது